9 September 2018

DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !


ஏற்கனவே நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயற் குழுவில் எடுத்த முடிவின்படி, புது டெல்லி மாபெரும் தொழிலாளர் பேரணிக்குப் பின்னர் 6.9.18 அன்று நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். R.N பராசர் அவர்களுடன் நம்முடைய தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J.R., மாநிலத் தலைவர் தோழர். M.செல்வ கிருஷ்ணன், மாநில நிதிச் செயலர் தோழர் A. வீரமணி ஆகியோர் புதுடெல்லி அஞ்சல் இயக்குனரகம் சென்று முறையே திருமதி. மீரா ஹண்டா, DG Posts, திரு.T.Q. முகம்மது, Secretary, Postal Services Board & DDG, PBI, திரு. Shailendra Dashora, DDG (SR, Legal & VP) ஆகியோரைச் சந்தித்து இலாக்காவின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர்கள் பிரச்னைகள் குறித்தும் நேரிடையாக கடிதம் அளித்து விவாதித்தோம். 

நமது துறையின் செயலர் வெளிநாடு சென்றிருப்பதால் அவரை சந்திக்க இயலவில்லை. 

இந்த சந்திப்பு தேதியில் நமது சம்மேளனத்தின் சார்பிலும், நம்முடைய அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் அளிக்கப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

அவை தனியே சம்மேளன மற்றும் அகில இந்திய சங்க வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும். 

அளிக்கப்பட்டகடிதங்கள் அனைத்தின் மீதும் உடனடி நடவடிக்கை கோரியிருக்கிறோம். அவை அனைத்தின் மீதும் பேசிட வாய்ப்பு இல்லை எனினும், ஒவ்வொரு அதிகாரியுடனும் சில குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து நேரில் விவாதித்து தீர்வு கோரினோம். அதன் விபரங்கள் கீழே. 

DG Post உடன் பேசப்பட்ட பிரச்னைகள்:
--------------------------------------------------------------------
1. SAP/ DPMS நீண்ட காலமாக செயல்பாடின்மை குறித்தும் தற்போது கடந்த நான்கு நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது குறித்தும் இதன் காரணமாக பொது மக்கள் 
சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளது குறித்தும் தெரிவித்தோம். 
அதற்கு DG அவர்கள், இலாக்காவில் இதன்மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிதி ஒதுக்கீடு குறித்து துறை அமைச்சகம் விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும், இடைக்கால பிரச்சினைகள் குறித்து நேரடிப் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுத்து சரி செய்திட DDG TECH அவர்களை சென்னை அனுப்பி யுள்ளதாகவும் தெரிவித்தார். 

2. ஆட்பற்றாக்குறை பிரச்சினைக்கு, 
ஆயிரக் கணக்கில் காலியிடங்கள் இருந்தும் அவை FEEDER CADRE ஆகிய எழுத்தர் பகுதியில் இல்லாமல் SUPERVISORY பகுதிகளில் அதிகம் இருப்பதாலும், அந்த உயர் நிலை பதவிகளை உரிய தகுதியான சேவைக்காலம் உள்ள நபர்கள் இல்லாத காரணத்தால் நிரப்பிட இயலவில்லை என்பதால், எழுத்தர் பகுதியில் ஆளெடுப்பு என்பது அறிவிக்கப் பட்டாலும் கூட அதிக அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்திட வில்லை என்பதை சுட்டிக் காட்டி கடிதம் அளித்து பேசினோம். இதனடிப்படையில் உடனடியாக HSG I, HSG II பதவிகளை நிரப்பிடுவதற்கு அடிப்படை சட்டத்தை ஒரு முறை தளர்த்தி அனைத்து உயர்நிலைப் பதவிகளையும் NOTIONAL ஆக உடனடியாக நிரப்பிட, உரிய பரிந்துரைகளை DOPT அமைச்சகத்திற்கு உடனே அனுப்பிட வேண்டும் என்று கோரினோம்.இதனை ஏற்றுக் கொண்ட DG அவர்கள் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

3.மேலும் அனைத்து மாநிலங்களிலும் கேடர் சீரமைப்பு உத்திரவை மேலும் தாமதமின்றி அமல் படுத்த வேண்டும் என்றும் , அப்படி அமல் படுத்தப்பட்டால், மீதமுள்ள LSG பணியிடங்களில் எழுத்தார்கள் பதவி உயர்வு பெற்று அமர்வார்கள் என்றும் இதன் காரணமாக எழுத்தர் காலியிடங்கள் மேலும் ஏற்பட்டு புதிய ஆளெடுப்பு சாத்தியம் ஆகும் என்றும், விதி 38 இடமாறுதல்களும் தாமதமின்றி கிடைக்கும் என்றும் வலியுறுத்தினோம். இதனையும் ஏற்றுக் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். 

4.மூன்றாவதாக, ஆட்பற்றாக்குறை பிரச்சினை தீரும்வரை , எழுத்தர் காலியிடங்களில் , விருப்பமும் தகுதியும் உள்ள தபால்காரர், MTS, GDS ஊழியர்களை பணி செய்திட உரிய உத்திரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதன் மீது DG அவர்கள் உடன் ஒப்புதல் தரவில்லை எனினும் இது குறித்து DDG ESTT உள்ளிட்ட கீழ் நிலை அதிகாரிகளிடம் நமது கடிதம் குறித்து விவாதித்து உரிய முடிவை எடுப்பதாக தெரிவித்தார். 

5. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு அதன் துவக்கத்தின்போதே, ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு இந்த CADRE இன் தேவை அல்லது மேம்படுத்துதல் குறித்து பரிசீலிப்பதாக இலாக்கா உறுதி அளித்திருந்த போதும் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த CADRE குறித்த எந்த வித முடிவோ , அல்லது கேடர் சீரமைப்போ , சீனியர் POSTMASTER பதவிகள் IDENTIFY செய்திடவோ இதுவரை நடக்கவில்லை என்று கோரி கடிதம் அளித்தோம். அதற்கு DG அவர்கள், உறுதி அளித்தபடி இந்த ஆண்டில் அதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், இவை விரைவு படுத்தப்படும் என்றும் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். நம்மை பொறுத்தவரை GENERAL LINE, PM GRADE
இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்றும், இருக்கின்ற GRADE I POSTMASTER பதவிகளை HSG II நிலைக்கு உயர்த்தவும், GRADE II பதவிகளை HSG I நிலைக்கு உயர்த்தவும் , GRADE III பதவிகளை NFG நிலைக்கு உயர்த்தவும் அந்த POSTMASTER களை அவ்வாறே அந்தந்த பதவிகளில் பணியமர்த்திடவும் கோரியுள்ளோம். இவை கேடர் சீரமைப்பில் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

6. தமிழகத்தில் எழுத்தர் பகுதியில் நாமக்கல், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற கோட்டங்களில் காலிப் பணியிடங்கள் ASSESSMENT செய்வதில் கடந்த 2005 முதல் 2008 வரையான காலங்களில் குளறுபடிகள் 
நடந்துள்ளதாகவும் இது போல பல கோட்டங்களில் உள்ளதாகவும் இந்த கோட்டங்களில் எல்லாம் SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH க்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பதாகவும் இவற்றை சரிபார்ப்பு செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் ஆளெடுப்பு உடனே
நடத்திட வேண்டும் என்றும் ஏற்கனவே கோரியதை 0000)0)JCM இலாக்கா குழு கூட்டத்தில் ஏற்றுக் கொண்டும், RJCM கூட்டத்தில் ஒப்புக் கொண்டும் இன்று வரை இதன் மீது எந்தவித நடவடிக்கையும் தமிழக அஞ்சல் நிர்வாகத்தால் எடுக்கப் படவில்லை என்றும்தெரிவித்து கடிதம் அளித்தோம். இதன் மீது உடன் நடவடிக்கை எடுப்பதாக DG அவர்கள் உறுதி அளித்தார். 

7. DEMONISATION காலத்தில் பணியாற்றிய விடுமுறை மற்றும் பணி நீட்டிப்பு காலங்களுக்கு இதுவரை எந்த வொரு மாநிலத்திலும் ஈட்டு ஊதியம் வழங்கப் படவில்லை என்றும் இதன் மீது இலாக்கா உடனடி முடிவை எடுத்து விடுமுறை நாள் பணிக்கு ஒரு நாள் ஊதியக் கணக்கிலும், நீட்டிக்கப்பட்ட பணி காலத்திற்கு ஒரு நாள் ஊதியத்தின் மணி நேரக் கணக்கிலும் வழங்கிட உத்திரவு இட வேண்டினோம். இதன் மீதும் உடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

அடுத்து திரு.T.Q. முகம்மது, Secretary, Postal Services Board & DDG, PBI, அவர்களை சந்தித்தோம். அவரே இலாக்காவில் IPPB பகுதிக்கான நேரடி பொறுப்பு வகிக்கும் அதிகாரி . அவருடன் IPPB குறித்த நமது எதிர்ப்பினை தெளிவாக பதிவு செய்தோம். இதன் மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. இது அரசின் கொள்கை முடிவு என்றும் IPPBன் முதலீடுகள் நூறு சதமும் அரசின் கையில் தான் உள்ளது என்றும் அன்னிய மற்றும் தனியார் முதலீடுகள் செய்வதில் அரசு உடனடியான முடிவுகள் எதுவும் எடுக்காது என்றும் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அப்படி எதுவும் செய்வது குறித்து காபினெட் தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இது ஒரு AGENCY பணியாகத்தான் அஞ்சல் ஊழியர்கள் செய்திடுவார்கள் என்றும் அதற்கான ஊக்கத் தொகை அதிக அளவில் வழங்கிட உரிய கோப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் விரைவில் அவை அதிகார பூர்வமாக அறிவிக்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும் இன்சூரன்ஸ் கம்பெனி துவக்குவது குறித்து அறிவிப்பு நிலையில் தான் உள்ளதே தவிர உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப-்படவில்லை என்றும் தெரிவித்தார். நம்மைப் பொறுத்தவரை ஏற்கனவே POSB , MONEY ORDER போன்றவை நிதி அமைச்சகத்தின் சேவைகள் ஆன போதிலும் அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக இயங்குவது போல IPPB யும் இயங்கிட வேண்டும் என்றும் , IPPB தனி கம்பெனி ஆக இருக்கும் பட்சத்தில் அதற்கென தனியே பணியாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும் என்றும் , அஞ்சல் பகுதியிலிருந்து DEPUTATION செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் பதிவு செய்தோம். மேலும் இந்தப் பணிகளை அஞ்சல் துறை பணியாளர்களை ஈடுபடுத்தி செய்வதை எதிர்க்கிறோம் என்றும் பதிவு செய்தோம். உங்களின் கருத்துக்கள் துறையின் செயலரிடம் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இந்த சந்திப்பின் மூலம் நமது தெளிவான முதன் நிலை எதிர்ப்பை இலாக்காவுக்கு பதிவு செய்துள்ளோம் என்பது முக்கியமானதாகும்.

இதன் பின்னர் திரு. Shailendra Dashora, DDG (SR, Legal & VP) அவர்களை சந்தித்து இரண்டு கடிதங்களை அளித்துப் பேசினோம் . 
முதலாவது, உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ள AIPEU GDS சங்கத்திற்கு உறுப்பினர்களிடம் இருந்து சந்தா பிடித்து அளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது. இதற்கு உரிய ஏற்கனவே RSA விதிகளின் படியான உத்திரவு நகல்களை அளித்துப் பேசினோம்.உங்கள் வாதம் சரியானது என்றும் இதன் மீது துறை செயலருக்கு உரிய கோப்பு குறிப்பு அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்தார். 
இரண்டாவது, எந்தவித உறுப்பினர் சரிபார்ப்பிலும் ஈடுபடாத, உரிய ஊழியர் சதவீத எண்ணிக்கையை பெறாத சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தவறு என்பதை சுட்டிக் காட்டி பேசினோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்திட அவர் உறுதி அளித்தார்.

பேசிய விபரங்களையும் உள்ளடக்கி பல்வேறு அகில இந்தியப் பிரச்சினைகளின் மீது மொத்தம் 29 கடிதங்கள் ஒரே நாளில் அளிக்கப்பட்டன என்பது நமது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சியின் வெளிப்பாடாகும். இவையெல்லாம் நமது தலைவர் KVS அவர்களின் முழுமையான உதவியுடன்
நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் கடிதங்களைத் தயார் செய்து எடுத்துச் சென்று நமது சம்மேளன மாபொதுச் செயலரை அழைத்துச் சென்று பேசிட எடுத்த முயற்சிகளாகும். நமது தலைவர் KVS அவர்களுக்கு நமது பேரவை சார்பாக நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள். 

இந்த சந்திப்புகளுக்கு தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை உடன் அழைத்துச் சென்று விவாதித்து கடிதங்களை அளித்துப் பேசி ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு உதவிய நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். R.N. பரசர் அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம். 

கீழே DG அவர்களது CHAMBER எதிரே அவரை பார்க்கச் செல்லுமுன் நமது சம்மேளன மாபொதுச் செயலருடன் சேர்ந்து நமது மாநிலச் சங்க நிர்வாகிகள் அமர்ந்து இருக்கும் காட்சியின் புகைப்படம். அருகே கர்நாடக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலர். 

தோழமையுடன் மாநிலச் 
சங்கத்தின் செய்திப் பகிர்வு, 

= NCA- பாலு 
எழுச்சிப் பேரவை, 
தமிழ் மாநிலம். 

3 September 2018

RELAX RFRESH RULING KNOWLEDGE

RELAX & REFRESH RULING KNOWLEDGE ON DISCIPLINE
                                                                            
7-I. CCS (Conduct) Rules 1964
1.    Who is called a Government Servant?
Ø  Any person appointed by the Central Government to any Civil Service or post in connection with the affairs of the union and includes a civilian in a Defence Service, or holds a civil post under the union is called a Government Servant.

2.    Whether GDS (Formerly ED Agents) are Government Servants?
Ø  No. Though the Hon. Supreme Court has declared them as holders of Civil posts outside the regular services in the historic Judgment dated 22.04.1977, the Government has not yet allowed the status and all privileges extended as Government Servants.

3.    Who are the members of the family in relation to a Government Servant?
Ø  Wife or husband, as the case may be, sons/daughters including step sons/step daughters who are wholly dependent on the Government servant and any other persons related by blood or marriage and wholly dependent on him.

4.    What is the general conducts and behavior a Government servant shall at all times maintain?
Ø  Every Government Servant shall at all times maintain
(i) Absolute integrity
(ii) Devotion to duty
(iii) Do nothing which is un-becoming of a Government servant
(2) Government Servants holding supervisory post shall also take all possible steps to ensure the integrity and devotion to duty of other Government servants who are under his control and authority.

5.    Enumerate the special provisions in the CCS (Conduct) Rules to regulate the performance Conduct and behavior of the Government Servant while discharging his official duties and responsibilities.
Ø  He should not act otherwise than in his best judgment in the exercise of the powers conferred on him except when he is acting under the direction of his official superior.
(a) Such directions shall be in writing as far as possible.
(b) Confirmation of oral instructions shall be issued/obtained in writing.
(2) Government Servants shall not act in a discourteous manner in the performance of official duties and shall not adopt dilatory tactics or cause willful delays in his official dealings.
(3) Governments Servants shall not indulge in any act of sexual harassment to any woman at her work place and those in charge of a workplace shall take appropriate steps to prevent sexual harassment to any woman in such workplace.

6.    Which are the other important and serious restrictions and prohibitions imposed on Government servants as per the provisions in the rules and instructions embodied in CCS (Conduct) Rules - 1964?
Ø  There are restrictions in
(i) Employment of near relatives, companies or firms
(ii) Maintaining connections with the press or media
(iii) Criticism of Government
(iv) Giving evidence before Committee or any other authority
(v) Communications of official information
(vi) Raising funds or collections
(vii) Accepting gifts
(viii) Engaging in private trade or employment
(ix) Investments lending and borrowing
(x) Acquiring and disposing movable, immovable and valuable properties.
(xi) Vindication of acts as Government servant and his character
(xii) Marriage; and
(xiii) Consumption of intoxicating drinks etc.
(2) Government servants are prohibited from
(i) Taking part in politics and elections
(ii) Joining associations the objects or activities of which are prejudicial to the interests of the sovereignty and integrity of India or public order or morality.
(iii) Giving or taking or about the giving or taking dowry and even demanding dowry directly or indirectly from the parent or guardian of a bride/bridegroom.
(iv) Canvassing of non-official or other outside influence to further his interest in respect of his service matters; and
(v) Employment of Children below 14 years of age.
        Apart from the above restrictions and prohibitions it is stipulated in Rule - 17 of the CCS (Conduct) Rules - 1964 that a Government Servant shall so manage his private affairs so as to avoid habitual indebtedness or insolvency"

 No. 11013(2)/88-Estt (A) dated 07.07.1988)

Will be continued next week

2 September 2018

நமக்கு அரசியல் சார்பு வேண்டாம் ; ஆனால் அரசியல் தெளிவு தேவை.

புதிய பென்சன் திட்டம் 1.1.2004 முதல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிமுகப்படுத்தி, மன்மோகன் சிங் தலைமையிலான UPA I அரசினால் அது அமல் படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியும்.

அது பாராளுமன்றத்தில் மசோதாவாக UPA II அரசாங்கத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் சட்ட பூர்வமாக அமல் படுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும்.

ஆனால் இந்த மசோதாவை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களித்த மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் இந்த புதிய பென்சன் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை எவராவது உங்களுக்கு சொல்லியிருக்கிறார்களா ?

மேலும் ஒரு உண்மையும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்காது. அது தோழர். பினரயி விஜயன் தலைமையிலான மார்க்சிய கம்யூனிஸ்ட கடந்த மூன்றாண்டுகளாக ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில் இன்னமும் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட வில்லை என்பதுதான் அந்த உண்மை.

தொழிலாளியின் தோழன் என்று சொல்லிக் கொள்பவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை ரத்து செய்திருக்க வேண்டாமா ? இல்லையா ?

இங்கே போராடும் 'தோழர்கள்' அங்கே வாய் மூடி மௌனமாக உள்ளனர். இங்கே அரசியல் பேசி தொழிற்சங்கத்தை கெடுப்பவர்கள், அங்கே ஊழியரை அடங்கிப் போக சொல்லுகின்றனர். இதைத்தான் நமது பேரவை கண்டிக்கிறது.

நமது தொழிற் சங்கத்திற்குள் எந்த அரசியல் கட்சியின் நுழைவும் வேண்டாம். எந்தக் கட்சி நல்லது செய்தாலும் அதனை வாழ்த்துவோம். எந்தக் கட்சி ஊழியருக்கு தீமை செய்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவோம். இதுவே நமது கொள்கை. போஸ் அணியினர் போல நமக்கு 'Selective Amnesia' கிடையாது.

இந்தக் கருத்தின் மீது நீங்கள் விவாதிக்கலாம். நானும் தலைவரும் பதிலளிக்க காத்திருக்கிறோம்.
x

IPPB ஐ நாம் ஏன் புறக்கணிக்கிறோம்?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
IPPB ஐ நாம் ஏன் புறக்கணிக்கிறோம் ?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

நமது தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தவிர, இதர சாதாரண உறுப்பினர்கள், மாற்றுச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் நேற்றைய தேதியில் (01.09.2018) பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு மற்றும் அஞ்சல் துறையால் நடத்தப்பட்ட IPPB துவக்க விழாவில் ஏதோ அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிபோல மிக்க மகிழ்ச்சியுடன் புத்தாடை அணிந்து பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தது உங்களுக்குத் தெரியும்.

பல WHATSAPP குழுக்களிலும், முகநூல் பதிவுகளிலும் இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் என்று எண்ண வேண்டாம். அதிகம் விழிப்புணர்வு உள்ள தொழிற்சங்கங்கள் உள்ள தமிழகப் பகுதியிலேயே இப்படி என்றால், இதர மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். அவ்வளவு கொண்டாட்டம். நமது NFPE சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கூட பல வட மாநிலங்களில் இந்த விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு நிகழ்வை பதிவிட்டது மட்டுமல்ல, IPPB விழிப்புணர்வு பேரணிகள் என்று வாத்திய முழக்கங்களோடு நடனமிட்டு கொண்டாடிய நிகழ்வை முகநூல் பதிவுகளில் பரவலாக காண முடிகிறது.

அரசாங்கத்தின் வலிமையான பிரச்சாரத்தினால் பொது மக்கள் வேண்டுமானால் இந்த புதிய திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு வரவேற்கலாம். ஆனால் இந்த புதிய வங்கிப் பகுதி வேலைகளை செய்திட வேண்டிய அஞ்சல் துறை ஊழியர்கள் இப்படி மகிழ்ச்சியாக இந்த வங்கியின் வருகையை வரவேற்பது சற்று ஜீரணிக்க முடியாத ஒரு நிலையாகவே நமது தொழிற் சங்கத்திற்கு உள்ளது.

அப்படி ஏன் நமது தொழிற் சங்கத்திற்கு இதன் மீது வெறுப்பு ? ஒரு வேளை நமக்கு சரியான புரிதல் இல்லையா என்று கூட பல தோழர்கள் வினவ ; அட ... இவர்களுக்கு இதே வேலையப்பா ... விடு .. விடு .. நமது அதிகாரிகள் எவ்வளவு அன்பாக நம் அனைவரையும் அழைத்துச் சென்று வேலைகூட செய்ய வேண்டாம் என்று கூறி இந்த விழாவில் நம்மை கௌரவப் படுத்தியுள்ளார்கள். இதை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் ? என்று பல ஊழியர்கள் வெளிப்படையாகவே பேசிச் செல்வதும் நமக்கு தெரிகிறது.

அப்படி ஊழியர்கள் ஆதரவைப் பெற்ற இப்படிப்பட்ட நல்ல ஒரு திட்டத்தை நாம் எதிர்க்க காரணங்கள் உண்டா ? நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் , மாற்றுச் சங்கத் தோழர்களுக்கும் இதனை பதிவிட்டு அளியுங்கள். சரியா அல்லது தவறா என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

IPPB துவங்கப்பட்டதன் வரலாறு
-------------------------------------------------------

1. 2006 ஆம் ஆண்டு இந்திய அரசின்
11 வது அய்ந்தாண்டு திட்டத்தில்,
அஞ்சல் துறை 1000 கோடி நட்டத்தில் இயங்குவதால் இந்த நட்டத்தை ஈடு கட்ட அஞ்சல் துறைக்கென்று ஒரு வங்கிச் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

2. 2009 இல் இந்திய அஞ்சல் துறைக்கென்று அஞ்சல் வங்கி தனியாக உருவாக்கிட அரசின் அறிவிப்பு செய்யப்பட்டது.

3. 2012 இல் NATIONAL POSTAL POLICY அறிவிக்கப்பட்டு அஞ்சல் துறையில் அஞ்சல் வங்கி தனியாக துவக்கி அதற்கென தனியே ஒரு MANAGEMENT BOARD ஏற்படுத்தப் படவேண்டுமென்றும், அதில் அஞ்சல் துறையின் செயலர் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டுமென்றும் இது PPP முறையில் செயல்படுத்தப்பட்டு இந்த MANAGEMENT BOARD இல் தனியார் நிறுவன முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்றும் அறிவிக்கை வெளியிப்பட்டது.

4. பிப்ரவரி 2013 இல் இதற்கென திட்ட முன்வடிவுகளை தரும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை Ernst and Young என்ற நிறுவனத்தை இந்திய அஞ்சல் துறை பணித்தது. இதன் மீது அளிக்கப்பட பரிந்துரையில் மத்திய நிதி அமைச்சகம், இந்திய அஞ்சல் துறைக்கு தனியே வங்கி ஏற்படுத்தி நிர்வகிக்க முன் அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ கிடையாது என்று கூறி இந்த முன்மொழிவை நிராகரித்தது.

5. ஆகஸ்ட் 2013 இல் திட்டக் குழுவும் இதே காரணங்களை கூறி இந்திய அஞ்சல் சேவை பகுதி வங்கியாக மாற்றிட முடியாது என்றும் மேலும் தனியே வங்கிப் பணிகளை நிர்வகிக்க இந்திய அஞ்சல் துறைக்கு போதிய முன் அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ கிடையாது என்று கூறி இதனை நிராகரிக்க, இதன் மீது அக்டோபர் 2013 இல் காபினெட் தனது முடிவை அறிவித்து இந்த முன்மொழிவை நிராகரித்தது.

6. இதுவரை, இந்திய அஞ்சலின் ஒரு பகுதியான மத்திய நிதி அமைச்சகத்தின் கீழான அஞ்சல் சேமிப்பு வங்கி என்பது இந்திய அஞ்சல் வங்கியாக மாற்றப்பட்டு செயல்படும் என்றும் முற்றிலும் அஞ்சல் துறையின் கீழ் இந்த வங்கிப் பகுதி இயங்கும் என்றும் அஞ்சல் ஊழியர்களில் ஒரு பகுதியினரே இதனை நிர்வகிப்பார்கள் என்றும் தொழிற் சங்கங்கள் நம்பி வந்தன. அதன்மீது கருத்துக்களை கூறி வந்தன.

7. ஆனால் தமிழக அஞ்சல்மூன்று சங்கம் மட்டும் NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையில் இது ஆபத்தான எதிர்கால விளைவுகளை ஏற்படுத் தக்கூடும் என்றும் இதன் மீது சரியான புரிதல் வேண்டும் என்றும் 2013 லேயே தனது கருத்துக்களை தனது வலைத் தளத்தில் பதிவிட்டது என்பது உண்மை. இப்போதும் சென்று பார்த்தலும் தெரிந்து கொள்ளலாம்.

8. இதன் பிறகு இந்திய அஞ்சல் துறையில் நட்டத்தில் இயங்கி வரும் அஞ்சல் கட்டமைப்பை புதுப்பித்து விரிவுபடுத்திட ஆலோசனை வழங்கிடுமாறு TASK FORCE என்ற கமிட்டி ஒய்வு பெற்ற முன்னாள் காபினெட் செயலர் திரு. T.S.R. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 2014இல் அமைக்கப்பட்டு, அந்தக் கமிட்டி டிசம்பர் 2014 இல் இந்தத் துறை ஆறு கூறுகளாக பிரிக்கப்பட்டு தபால் கையாளுதல் தவிர மீதமுள்ள ஐந்து பகுதிகளும் CORPORATE கம்பெனிகளாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அதில் முக்கியமானவை BANKING, INSURANCE AND ECOMMERCE என்பவையாகும். இதனை நமது தொழிற் சங்கங்கள் எதிர்த்தன. ஆனால் அஞ்சல் துறை CORPORATE மயமாக்கப்படாது என்று நமது துறையின் செயலர் அப்போது உறுதி அளித்தவுடன் இதனை நாம் மறந்துவிட்டோம்.

9. ஆனால் நவம்பர் 2014 லேயே இந்திய ரிசர்வ் வங்கியிடம் நமது அஞ்சல் துறை PAYMENT வங்கியை ஏற்படுத்து வதற்கான விண்ணப்பத்தினை அளித்தது. இது அரசின் முன்கூட்டிய முடிவு ஆகும். ஆகஸ்ட் 2015 இல் வெளியிடப்பட்ட பட்டியலில் AIRTEL, RELIANCE, PAYTM, IPPB உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இந்த PAYMENT வங்கிக்காக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன. அவை கொள்கை அளவில் ஏற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

10. இதனை நம்முடைய அஞ்சல் துறை ஊழியர்கள், குறிப்பாக இளம் தோழர்கள் வரவேற்றனர். ஆனால் தமிழக அஞ்சல் மூன்று சங்கம் மட்டும் இது ஆபத்தானது. இந்த PAYMENT வங்கி என்பது அரசுத் துறையாக இருக்காது. கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்திட ஒப்புதல் அளித்தால் மட்டுமே இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க இயலும்; எனவே இதன் ஊழியர்கள் அரசு ஊழியர் என்ற அந்தஸ்தை இழப்பார்கள் என்பதை வலைத்தள மற்றும் முகநூல் பதிவுகளில் எடுத்துக்காட்டி நமது தொழிற் சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

11. கடைசியாக INDIA POST PAYMENT BANK LTD (INCORPORATED) என்ற பெயரில் IPPBயானது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த 17, ஆகஸ்ட் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த கம்பெனியை நிறுவதற்கான ஏற்பாடுகளும், ஊழியர் நியமன நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன.நேற்று இந்த கார்ப்பரேட் வங்கி முறையாகத் துவக்கப்பட்டது.


IPPB ஐ நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ?
---------------------------------------------------------------

1. இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி என்பதன் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட முழுப்பெயர் INDIA POST PAYMENT BANK LTD. (INCORPORATED) என்பதாகும். இதன் பெயரே இதன் உண்மைத் தன்மையை சாதாரண பாமரனுக்கும் தெரிவிக்கும். லிமிடெட் என்பதும் INCORPORATED என்பதும் ஒரு அரசுத் துறையை குறிப்பதாகாது.

2. இது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் விதி எண் 22ன் கீழ் Banking Regulation Act 1949 அடிப்படையில், கம்பெனி சட்டம் 2013 இன் கீழ் PUBLIC LIMITED COMPANY யாக பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ரிசர்வ் வங்கி அனுமதிக்கும். எனவே இது இந்திய அஞ்சல் துறை என்ற அரசுத் துறையின் கீழ் வராது. ஒரு கம்பெனியாக மட்டுமே இயங்கும்.

3. ரிசர்வ் வங்கி விதிகளின் படி இது அஞ்சல் வாரியத்தின் கீழ் இயங்காது. இதற்கென்று தனியே ஒரு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 இயக்குனர்கள் உள்ளனர். இந்த ஒன்பதில் ஒருவரே நமது துறையின் செயலர். இந்த கம்பெனியின் தனி வாரியத்திற்கு CEO & MD என்பவர் திரு . சுரேஷ் சேத்தி ஆவார். இவர் VODAFONE நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். இதுபோல இந்த கம்பெனியின் பங்குகள் விற்பனைக்குப் பிறகு, தனியார் அல்லது அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் இந்த மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவர்.

4. ரிசர்வ் வங்கியின் PAYMENT வங்கி விதி VII ன் படி 49% வரை அந்நிய அல்லது தனியார் முதலீடு இந்த கம்பெனியில் அனுமதிக்க வேண்டும். துவக்கும்போது 100% அரசின் முதலீடு. ஆனாலும் கம்பெனி வளர்ந்த பிறகு முதலீட்டுக்கான பங்குகள் கோரப்படும். அப்போது அந்நிய அல்லது தனியார் நிறுவனங்களுக்கு 49% வரை பங்குகளை விற்கவேண்டும் என்பது விதி ஆகும். பங்குகள் விற்றபிறகு இந்த CORPORATE COMPANY கிட்டத்தட்ட ஒரு தனியார் நிறுவனம் போல ஆகிவிடும்.

5. இதன் பணியாளர்கள் வங்கி சட்ட விதிகளின் படி தனியாக நியமிக்கப் படுவார்கள். தற்போது BRANCH LEVEL வரையில் ஏற்கனவே மேலதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் ஊதியம் என்பது வங்கி சட்ட விதிகளின்படி தானே தவிர, ஊதியக் குழு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் ஊதிய விகிதங்கள் கிடையாது. ஆரம்ப நிலையில் ஆட்கள் பற்றாக்குறைக்கு அஞ்சல் பகுதியிலிருந்து DEPUTATION அடிப்படையில் நம்முடைய ஊழியர்கள் அங்கு பணியமர்த்தபட்டுள்ளார்கள். தற்போதுள்ள கடுமையான ஆட்பற்றாக்குறை சூழலில் இங்கிருந்து ஊழியர்களை அங்கே அனுப்புவது என்பது நமது ஊழியர்களை மேலும் பணிச் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

6. இந்த சூழலில் THIRD PARTY PRODUCT என்ற வகையில் 230 விதமான தனியார் அல்லது இதர நிறுவனங்களின் வேலைகள் AGENCY அடிப்படையில் நம் ஊழியர்களே இதற்காக செய்து தரவேண்டும். ஏற்கனவே உள்ள பணிச்சுமை மற்றும் ஆட்பற்றாக்குறை நிலையில் இது நம்மால் சாத்தியமா ? ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் அல்லது தற்கொலை சாவுகள்தான் அதிகமாகும்.

7. BRANCH LEVELஇல் அந்த வங்கிக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அதன் பணிகள் நம்முடைய எழுத்தர், தபால்காரர், GDS மூலமே நாடு முழுமைக்கும் நிறைவேற்றப்படும். இதற்காக INCENTIVE என்று குறைந்த தொகையை கொடுத்து முழு வேலையும் வாங்கப்படும்.

8. நமது அஞ்சல் சேமிப்பு வங்கியின் 17 கோடி CUSTOMER களும் கிட்டத்தட்ட 34 ஆயிரம் கோடி கணக்குகளும் INTEROPERABLE ஆக இந்த கம்பெனியாக செயல்படும் வங்கிக்கு தாரை வார்க்கப்படும். அஞ்சல் துறையின் 40% வருமானத்தை தரும் அஞ்சல் சேமிப்பு வங்கி படிப்படியாக கால ஓட்டத்தில் அந்த வங்கிக்கு மாற்றப்படும்.

9. தற்போதுள்ள IPPB விதிகளின்படி SB கணக்குகள் தவிரவும் RD கணக்குகள், SSA மற்றும் PPF கணக்குகளின் TRANSACTION கள்கூட IPPB கணக்குகள் மூலம் PAY IN SLIP இல்லாமல் நேரிடையாக BIO METRIC முறையில் IPPB இன் கருவிகளிலேயே செலுத்திடலாம். இது நேரிடையாக CENTRAL SERVER மூலம் உரிய கணக்குகளில் சேர்ந்துவிடும். எனில் நமது அஞ்சல் வங்கி TRANSACTION என்பது என்ன ஆகும்?. வேலைப்பளு இல்லை என்று காரணம் கூறி ஊழியர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும்.

10. அடுத்து இன்சூரன்ஸ் பகுதியும் தனியே கம்பெனி ஆக்கப்படும் என்று நமது துறையின் அமைச்சர் கடந்த 7.7.2018 அன்று வெளிப்படையாக பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் வருமானம் அதிகம் வரக்கூடிய PREMIUM PRODUCTS என்று சொல்லக்கூடிய ECOMMERCE பகுதி, COD மற்றும் EXPRESS PARCEL, SPEED POST போன்றவற்றை பிரித்தெடுத்து தனியே CORPORATE COMPANY ஆக அறிவிக்க முன்னோட்டமாக PARCEL DIRECTORATE தற்போது தனியே உருவாக்கப் பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

11. TSR சுப்ரமணியன் கமிட்டி பரிந்துரைப்படி இப்படி வங்கிப் பகுதி, இன்சூரன்ஸ் பகுதி , ECOMMERCE பகுதி என்பவை CORPORATE கம்பெனி ஆக்கப்பட்டால் அஞ்சல்துறை என்ற அரசுத் துறை POST CARD, ILC, NEWS PAPER இவைகளை வைத்து நடத்தப்படுமா ? இவை ஏற்கனவே நட்டத்தில் உள்ள பகுதிகள். அப்படியானால் நாம் அரசுத்துறையாக இருப்போமா ? அல்லது CORPORATE கம்பெனியாக இருப்போமா ?

இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நிச்சயம் நடக்காது என்பது தெரியும். ஆனால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் ஏற்படும் போது , இப்போது இருக்கும் அரசு ஊழியர்கள் படிப்படியாக ஒய்வு அல்லது விருப்ப ஒய்வு பெற்றிட, புதிய கம்பெனிகளின் ஊழியர்கள் பெரும்பகுதியாகவும் தற்போதுள்ள இளைஞர்கள் சிறு பகுதியாக உள்ள அரசு ஊழியர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு கம்பெனிகளிடம் எங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று கேட்க முடியுமா ? இதற்கு சட்டத்தில் இடம் உண்டா ?

இது போல இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் அளித்திட இந்த சுற்றறிக்கை போதாது. சிறிய எழுத்தில் இந்த நான்கு பக்கங்களை படிக்கவே பல தோழர்களுக்கு அலுப்பாக இருக்கும். ஆனால் இது நம் வாழ்க்கை பிரச்சினை அல்லவா ?

இந்த வங்கி நம் அஞ்சல் துறையின் வங்கியாக ஆரம்பத்தில் பேசப்பட்டது போல இருந்திருப்பின் நாம் எதிர்க்க வேண்டிய சூழல் இருக்குமா ? அதில் தேவையான முன்னேற்றங்களை கோரிப் பெற்றிக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா ?

தற்போது நமக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத கம்பெனி ஆக, ஆனால் நம்முடைய அஞ்சல் சேமிப்பு வங்கியை கபளீகரம் செய்யும் அமைப்பாக, அதிகப்படி ஆட்கள் எதுவும் இல்லாமல், இருக்கும் அரசுத் துறை ஊழியர்களை வைத்தே அதன் பணியை செய்யும் அடிமை ஏஜெண்டுகளாக ஆக்கிட வந்திருக்கும் IPPB ஐ நாம் எப்படி ஏற்பது ? இதனை நம் ஊழியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கலாமா ?
இதனை நீங்கள் ஏற்கிறீர்களா ?

ஆயின் இவற்றை அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் ஏன் முன் கூட்டியே எதிர்க்க வில்லை ? தற்போது விழாவை வெறும் புறக்கணிப்பு செய்தால் போதுமா ? என்று நிறைய தோழர்கள் கேட்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளை நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் ஆரம்பம் தொட்டே தெளிவாக சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. முன் பத்திகளில் அளித்த செய்தி போல ஏற்கனவே எச்சரிக்கைகளை நாம் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறோம்.

இந்த IPPB க்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுக்கப்பட்ட பிறகும் கூட, கடந்த 2018 பிப்ரவரி 26 மற்றும் 27 தேதிகளில் பாட்னாவில் நடைபெற்ற அஞ்சல் மூன்று மத்திய செயற்குழு கூட்டத்தில் AGENDA
5 இல் IPPB ஆய்படு பொருளாக வைக்கப்பட்டு , இதன் மீதும் CSI, GDS உள்ளிட்ட பிரச்சினைகளின் மீதும் நம் சம்மேளனமோ அல்லது குறைந்த பட்சம் நமது அஞ்சல் மூன்று சங்கமோ தொடர் போராட்டங்களை நடத்தி அதன் முடிவாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்திட வேண்டும் என்று கோரினோம்.

மத்திய சங்கத் தலைவராக உள்ள உங்கள் மாநிலச் செயலர் இந்த முன்மொழிவை தனது தலைமை உரையிலேயே சமர்ப்பித்தார். நமது தமிழகத்தை சேர்ந்த CHQ நிர்வாகிகள் அனைவரும் ஒரே குரலில் இதனை கருத்து மாற்றமின்றி முன் மொழிந்தோம்.

கேரளா , தெலிங்கானா, மேற்கு வங்க தோழர்களும் நமது கருத்தை ஆதரித்தனர். ஆனால் பெரும்பான்மை வட மாநிலங்களின் செயலர்கள் இதற்கு போதிய ஆதரவு தரவில்லை. என்றாலும் நாம் வேலை நிறுத்தம் வேண்டும் என்று அழுத்தமாகவே இறுதிவரை கோரி வந்தோம்.

இதன் பிறகே கடந்த 7.3.2018 அன்று இலாக்கா அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து IPPB
குறித்து கலந்துரையாடியது . இந்த நிலையிலாவது அகில இந்திய அளவில் அனைத்து தொழிற் சங்கங்களும் இதனை எதிர்த்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். என்ன காரணம் கருதியோ இது நடைபெறவில்லை.

வேறு வழியில்லாத நிலையில்தான் உங்கள் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் இதன் மீது குறைந்த பட்சம் ஒரு எதிர்ப்பினையாவது பதிவு செய்யும் பொருட்டு இந்த விழாவில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்தது. இது போலவே அதே நேரத்தில் நமது சம்மேளனமும் அகில இந்திய சங்கங்களும் இதே நிலையை அறிவித்தன .

காலம் கடந்து விட்டது என்று கவலைப்படாமல் இனியாவது இதன் மீது மாற்றங்கள் நாம் கோரிட வேண்டும். இதன் பணிகள் தனியே செய்திடப் படவேண்டும் என்றும் அஞ்சல் சேமிப்பு வங்கி சீரழிக்கப் படக்கூடாது என்றும், IPPB இன் ஊழியர்களே அதன் பணியை செய்திட பணிக்கப்பட வேண்டும் என்றும், இனி இன்சூரன்ஸ் மற்றும் ECOMMERCE பகுதிகள் CORPORATE மயமாக்கப்படகூடாது என்றும் கோரிக்கைகளை மாற்றி வைக்கலாம்.

அதன் மீது நம் துறையில் தொடர் போராட்டங்கள், தேவையானால் வேலை நிறுத்தங்கள் நடத்திடலாம். இந்த திசையிலாவது இனி சிந்தனையை நாடு முழுமைக்கும் ஒருங்கிணைப்போம்.

அதற்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கமே முன்கை எடுக்கும் என்ற உறுதியை கூறி கனத்த இதயத்துடன் முடிக்கிறோம்.

தோழமையுடன்
J. இராமமூர்த்தி,
மாநிலச் செயலர்,
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம். (1.9.2018)

DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !

ஏற்கனவே நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயற் குழுவில் எடுத்த முடிவின்படி, புது டெல்லி மாபெரும் தொழிலாளர் பேரணிக்குப் பின்னர் 6.9.18 அன்று...